நடிகர் சரத்குமார் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழா!

நடிகர் சரத்குமார் பங்கேற்ற கிறிஸ்துமஸ் விழா!

ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடியில் கிருஸ்துமஸ் தினத்தையொட்டி நடைப்பெற்ற சமத்துவ விருந்து விழாவில் பங்கேற்று அனைத்து சமுதாய மக்களுடன் கேக் வெட்டி ஆடை மற்றும் கிருஸ்மஸ் மரம் பரிசாக அளித்தர். அப்போது நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவாகளுக்கு¢ நடிகர் சரத்குமார் சால்வை அணிவித்தார்.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில், நடைப்பெற்ற கிருஸ்துமஸ் தின சமத்துவ விருந்து நிகழ்ச்சியில், நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான சரத்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

  அப்போது கேக் வெட்டி, கிருஸ்துவ மதபோதகர்களுக்கு கிருஸ்துமஸ் மரத்தையும், இஸ்லாமிய பெண்களுக்கு ஆடைகளையும் வழங்கினார்.

   பின்னர் அனைத்து சமுதாய மக்களும் சரத்குமாருக்கு, பகவத்கீதை, பைபிள், மற்றும் குரானை வழங்கினர்.  அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த 10க்கும் மேற்பட்டோரை பாஜக கட்சிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

  பின்னர் நடந்த சமத்துவ விருந்தில் சரத்குமார் கலந்துகொண்டு மக்களுடன் உணவு உண்டார்

  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

 அவரது குடும்பத்தினருக்கும் என் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன், நாடாளுமன்றத்தில் என்னோட பயணித்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னுடைய சிறந்த நண்பர்.

  மேலும் தமிழகத்தில் தற்போது முன்பகை காரணமாக யாரை எப்பொழுது வெட்டுவார்கள் என்று பயத்துடனே பொதுமக்கள் பயணிக்கின்றனர்.

  குற்றம் செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுத்தால் தான் நாடு அமைதியாக இருக்கும்.

 மேலும் ஓர் விழாவில் கூட்டம் வரும் என  போலீசாருக்கு தெரியும், அளவுக்கு அடங்காமல், கூட்டம் வந்ததற்கு, அல்லு அர்ஜூன் எப்படி பொறுப்பேற்ப்பார்.

 அவரை கைது செய்தது எவ்வித நியாயம், வீர தீர  ஏர் சாகசம் நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தார்கள் அப்போது யாரை கைது செய்தீர்கள் ? அல்லு அர்ஜுன் கைது செய்ய விவகாரத்தில் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.