சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டே நாளில் முடித்தது சரியல்ல!பா.ம.க.ஜி.கே.மணி பேட்டி!

சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டே நாளில் முடித்தது சரியல்ல!பா.ம.க.ஜி.கே.மணி பேட்டி!

ஜி.கே.சேகரன்,

தமிழகத்தில் நீண்டகாலமாக சிறைகளில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும், கோவை பாஷா மறைவுக்கு இரங்கல் - சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டே நாளில் முடித்தது சரியல்ல எத்தனை எம்.எல்.ஏக்கள் பேச முடியும் தொகுதி குறைகளை முடிக்க முடியாத நிலை பாமக கௌரவத்தலைவர் ஜி.கே மணி வேலூரில் பேட்டி.

 வேலூர்மாவட்டம், வேலூரில் ஒருங்கிணைந்த பாமக வேலூர் மாவட்ட பொதுகுழு கூட்டம் மாவட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெகன்,ரவி,அமைப்பு செயலாளர் அக்னி வேல்முருகன்,மாநில துணை தலைவர் இளவழகன்,பாமக மாநில கௌரவத்தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

  இதில் வரும் 21 ஆம் தேதி திருவண்ணாமலையில் நடக்கவிருக்கும் உழவர் பேரியக்கத்தின் மாநாட்டில் திரளானோர் கலந்துகொள்வது எனவும், வன்னியர்கள் 10.5 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கோரி பாமக சார்பிலும் வன்னியர் சங்கத்தின் சார்பிலும் வரும் 24 ஆம் தேதி ஆர்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 பின்னர் பாமக கௌரவத்தலைவர் ஜி.கே மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலையில் வரும் 21 ஆம் தேதி நடக்கும் உழவர் பேரியக்க மாநாடு விவசாயிகளின் பல முக்கிய பிரச்சணைகளை தீர்க்கும் வகையில் தீர்மானங்கள் கொண்டுவரப்படவுள்ளது.

   தமிழக அரசு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் என அறிவித்துள்ளது போதுமானதல்ல.

  எனவே அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், தமிழகத்தில் நீண்டகாலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைகைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

  நீண்டகாலம் சிறையில் இருந்து பாதிப்படைந்த கோவை பாஷா இறந்து போனது வருத்தமளிக்கிறது. அவருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். தமிழக சட்டமன்றம் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 100 நாட்களாவது நடந்தால் தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களின் தொகுதி பிரச்சணைகளை எடுத்துரைத்து தீர்வு கான முடியும்.

  ஆனால் தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இரண்டே நாள் சட்டமன்றத்தை நடத்தியது இப்போது தான். இனி வரும் காலங்களில் சட்டமன்றத்தை அதிக நாட்கள் நடத்த முன் வரவேண்டும்.

  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல திட்டம் தான் அதனை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டுமென சொன்னார்.