சென்னையை நெருங்கும் தீவிர மழை மேகங்கள்! பிற்பகலில் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்!

சென்னையை நெருங்கும் தீவிர மழை மேகங்கள்! பிற்பகலில் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்!

 ம.பா.கெஜராஜ், 

அதிக மழையை கொடுக்கக்கூடிய மேகங்கள் சென்னையை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

ஃபெங்கல் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ளது. கடந்த 8 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

  திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

   இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும்மாமல்லபுரம் இடையே ஃ பெங்கல் புயல்  கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

  மேலூம் சென்னை, செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல்  மழை பெய்தது.

 ஃபெங்கல் புயல் எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (30.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஃபெங்கல் புயல் தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், "மிதமானது முதல் தீவிர மழையை கொடுக்கக்கூடிய மழை மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன. இதன் காரணமாக வரும் நேரங்களில் தீவிர மழையை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், ஃபெங்கல் புயல் நவம்பர் 30 ஆம் தேதி கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.

 அத்துடன் மணிக்கு 60 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  இன்று பிற்பகல் ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது