லேட்டாக வரும் ஆசிரியர்கள்! பள்ளி குழந்தைகள் வெளியே அவதி!

கு.அசோக்,
பள்ளிக்கு நேரமாகியும் கேட்டை திறக்காததால் காத்திருந்த பள்ளி மாணவர்கள், அக்கறை இல்லாமல் அலட்சிய போக்குடன் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது டிஇஇஓ நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர் மாவட்டம், பாகாயம் பகுதியில் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி 8.45 மணிக்கு துவங்கும் நிலையில் மணி 9 மணி ஆகியும் பள்ளியினுடைய மெயின் கேட் திறக்காமல் இருந்தது.
சித்தூர் கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகே இந்த பள்ளி உள்ள நிலையில், பள்ளிக்கு வந்திருந்த மாணவ மாணவிகள் பூட்டப்பட்டிருந்த பள்ளிக்கு வெளியிலேயே காத்துக்கொண்டிருந்தனர்.
போதாகுறைக்கு லேசான மழை தூரல் வேறு.
முன்கூட்டியே பள்ளிக்கு வந்து பள்ளிப் பணிகளை கவனிக்க வேண்டிய ஆசிரியர்களே வராமல் காலதாமதம் செய்து குழந்தைகளை வெளியே காக்க வைத்த சம்பவம் பொதுமக்களிடையே எரிச்சலையுட்டியது.
எனவே இதுபோன்று அலட்சிய போக்குடன் செயல்படும் ஆசிரியர்கள் மீது உடனடியாக டிஇஇஓ துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.
சார் கோபித்துக் கொள்ளாதீங்க ஆசிரியர்கள் போராட்டத்துக்கு போய்விட்டிருப்பார்கள்.