பள்ளிக்கூடம் அருகில் உள்ள மதுக்கடைகளை மூடுங்கள்! ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த ஊராட்சி நிர்வாகிகள்!

ஜி.கே.சேகரன்,
கிராமப்புற ஊராட்சிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென ஊராட்சி தலைவர்களுக்கான கலந்தாய்வில் கூட்டத்தில் பெரும்பாலான கிராமப்புறதலைவர்கள் கோரிக்கை - ஏரிகளை தூர்வாரி விவசாயத்தை பாதுகாக்க வேண்டுமென வேண்டுகோள்.
வேலூர்மாவட்டம், வேலூர் தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஊராட்சித்தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமுலு உள்ளிட்டோரும் திரளான ஒன்றிய குழு தலைவர்களும் ஊராட்சிமன்ற தலைவர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசுகையில் வேப்பங்குப்பம் ஊராட்சியில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுகடை அகற்ற பல முறை கூறியும் நடவடிக்கையில்லை? உடனடியாக மதுகடையை அகற்ற வேண்டும் மேலும் ஏரிகளை தூர்வாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டுமென பேசினார்கள் இதே போல் சேனூரிலும் பள்ளி அருகாமையில் உள்ள மதுகடையை அகற்ற வேண்டும் கிராமபுறங்களில் முழுமையாக மதுகடைகளை மூட வேண்டுமென பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தி கோரிக்கை வைத்து இந்த கூட்டத்தில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.