பீடி சுருட்டும் அனைவரையும் பி.எஃப் திட்டத்தில் இணைக்கக் கோரி ஆர்பாட்டம்!

பீடி சுருட்டும் அனைவரையும் பி.எஃப் திட்டத்தில் இணைக்கக் கோரி ஆர்பாட்டம்!

ஜி.கே.சேகரன்,

வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஒருங்கிணைந்த பீடித்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

பீடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளன மாநில பொதுசெயலாளர் திருசெல்வன் தலைமை தாங்கினார்.

  மாநில தலைவர் ராமச்சந்திரன் இந்த ஆர்பாட்டத்தை துவங்கி வைத்தார்.

 பீடி சுருட்டும் அனைவரும் பி.எஃப் திட்டத்தில் சேர்க்கவும், தற்போது வழங்கும் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் பீடித்தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், வீடுகட்ட மாணியத்துடன் நிதி ஒதுக்கியும் நிலுவை தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

 பீடித்தொழிலாளர்கள் பங்களிப்பு தொகையை இ/எஸ்.ஐ திட்டத்திற்கு மாநில நிதியிலிருந்து வழங்க வேண்டும் வாரத்திற்கு ஆறு நாள் வேலை வழங்கவும் கூலி நிறைவு ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் பீடித்தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு ஐந்து லட்சம் நிதி ஒதுக்க வேண்டும்.

 என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டமானது நடந்தது இதில் திரளான பீடித்தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.