தொடர்ந்து வெடி பொருட்கள் பதுக்கி விற்பனை! தொடர் விபத்து...மாமுலாக வேடிக்கைப் பார்க்கும் அலுவலர்கள்!

தொடர்ந்து வெடி பொருட்கள் பதுக்கி விற்பனை! தொடர் விபத்து...மாமுலாக வேடிக்கைப் பார்க்கும் அலுவலர்கள்!

ஜி.கே.சேகரன்,

  வாணியம்பாடி அருகே பட்டாசு கடைக்காரர் வீட்டில் வெடி விபத்து. வீட்டில் பதுக்கிய வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் வீடுகள் இடிந்து சேதம்

   திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் வாணியம்பாடி பாங்கிரோ பகுதியில் பட்டாசு மற்றும் வெடி பொட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில் நேற்று மாலை ராமமூர்த்தியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடி பொட்கள் வெடித்து சிதறியதில் தீ பரவி அருகாமையில் இருந்த தென்னை மரங்கள் எரிந்தது.

  மேலும் அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு கால தாமதமாக வந்த வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

  மேலும் இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. சம்பவ இடத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் டிஎஸ்பி விஜயகுமார் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமமூர்த்தியின் மகனுக்கு சொந்தமான பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் நிலையில் தற்போது மீண்டும் ராமமூர்த்தியின் வீட்டில் சட்டத்திற்கு புறம்பான பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 கரெக்டா கொடுத்துடுறாங்க அல்லவா.....! அதான் பக்காவா வெடிகளை பதுக்குறாங்க.