பொது மக்களிடம் தர்ம அடி வாங்கிய பாஜக எம்எல்ஏ!

பொது மக்களிடம் தர்ம அடி வாங்கிய பாஜக எம்எல்ஏ!

 தா.தியோடர்,

  யானை தாக்கி  உயிரிழந்த பெண்ணை பார்க்க வந்த பாஜக எம்.எல்.ஏ.வை மக்கள் அடித்து சட்டையை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

   சிங்மங்களூரு மாவட்டம், ஹூல்லிமானே கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே யானை தாக்குதல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், எம்.எல்.ஏ.விடமும் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டதாக கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது.

  இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணை பார்க்க முடிகிரே தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த எம்.பி. குமாரசாமி வந்தார்.

   யானை தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தினர்.

   உயிரிழந்தப் பெண்ணின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொள்ள எம்.எல்.ஏ. குமாரசாமி, வந்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ. மீது கட்டை, கல் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தி விரட்டினர்.

  இளைஞர்கள் சிலர் குமாரசாமியின் சட்டையைக் கிழித்து விரட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், கிராம மக்களிடமிருந்து எம்.எல்.ஏ.வை மீட்டு காரில் அழைத்துச்சென்றனர்.

 இதனால் அங்கு பதற்றல் ஏற்பட்டது.