நீதிமன்றத்தில் போலி ஆவணம்:- சிக்கிய சீட்டிங் வாத்தியார்!

நீதிமன்றத்தில் போலி ஆவணம்:- சிக்கிய சீட்டிங் வாத்தியார்!

 பெ.விஜயகுமார்,

 சீட்டிங் சாம்பியனான டியூஷன் வாத்தியாரை திருச்சி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் போலி ஆவணங்கள் இருப்பது கண்டறியப்பட்டத்து,  அப்படியிருக்க அந்த ஆசிரியர் மீது போலீசார் 420 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுபற்றின விவரம் வருமாறு,

 திருச்சி பீம்நகரை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் விமான நிலையம் அருகே உள்ள கலைவாணர் தெருவில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் யூத் ஃபவுண்டேஷன்- 2014 மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே டிரஸ்ட் என்கிற பெயரில் அலுவலகம் திறந்தார்.

 அதில் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இலவச டியூஷன் எடுத்தார்.

 அதற்கு ஏதுவாக இளைஞர்கள், பட்டதாரிப் பெண்களை வேலைக்குச் சேர்த்திருந்தார்.

 அதற்காக அவர்களுக்குச் சம்பளம் தராமல் மாதக்கணக்கில் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மெடிக்கல் சீட் கிடைத்துள்ளதற்கான ஆணைகளை கொடுத்து ஏமாற்றி 11 லட்ச ரூபாய் பணத்தை இஸ்மாயில் வாங்கி சீட்டிங் செய்திருக்கிறார்.

 அவர் செய்த சீட்டிங் தொடர்பாக  அவர் மீது பல்வேறு வழக்குகள் திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்தில் ஆவணங்களை தயார் செய்து சமர்பித்துள்ளார்.

 இஸ்மாயில் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்பதை கண்டறிந்த நீதிமன்றம் அவர் மீது இதுதொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

 இதனையெடுத்து, பாலக்கரை காவல் நிலைய போலீசார் இஸ்மாயில் மீது 420 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.