மான் வேட்டையாடிய 2 பேர் கைது:- தோல்-கறி-வாகனம் பறிமுதல்!
கு.அசோக்,
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் காப்புக் காட்டில் மான் வேட்டையாடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பல்லலகுப்பம் காப்புக் காட்டில் புள்ளி மானை வேட்டையாடி அதை கரியாக்கி கொண்டிருந்த நாவீதம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குருநாதபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 10 கிலோ மான்கறி, மான்தோல், தலை மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
அவர்களை பேர்ணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து வனப்பகுதி காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.