ஐ.எப்.எஸ்.நிறுவனத்தால் ஒரு உயிர் பலி! பண விவரங்களை அறிந்த மூன்று பெண்கள் யார்?

Ma.ba.Gajaraj,
மக்களிடமிருந்து பல கோடி ரூபாயை மோசடி செய்ததாக ஐ.எப்.எஸ். என்ற தனியார் நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் நீள்கிறது. இந்நிலையில் அதன் வசூல் ஏஜெண்ட் காட்பாடியில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்!
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி மற்றும் காட்பாடி உள்ளிட்ட இடங்களில் வேலூரை தலைமையிடமாக கொண்டு இண்டர் நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் என்கிற (ஐ.எப்.எஸ்) நிதி நிறுவனம், ஆந்திரா டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தது.
இந்த நிதி நிறுவனத்தில் மக்கள் பணம் முதலீடு செய்தால் பல மடங்கு அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியது.
இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் பணம் முதலீடு செய்தனர்.இந்நிலையில் ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தப்பி தலைமறைவானர்கள்.
இது குறித்து சென்னை பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவான உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.எப்.எஸ் நிதி நிறுவனத்தின் ஏஜெண்டாக இருந்த காட்பாடி சேவூரை சேர்ந்த வினோத்குமார் (28) என்பவர் பலரை அந்த நிறுவனத்தில் சேர்த்து பணம் பெற்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நிறுவனம் மூடப்பட்டிருப்பதை அறிந்த மக்கள், மேற்படி ஏஜெண்டு வினோத் குமாரை பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து வெளியில் வராத வினோத் குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.
இறப்பதற்கு உன் கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருக்கிறார். அதில் என்னை நம்பியவர்களுக்கு என் மூலம் பணம் கிடைக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறிந்த போலிசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்படி பைனான்ஸின் உரிமையாளர்கள் தற்போது எஸ்கேப் ஆகிவிட்ட நிலையில், வினோத்தை போன்ற பல ஏஜெண்டுகள் கஸ்டமர்களிடம் தர்ம அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இருந்த போதும் இந்த மேட்டரை வைத்து சில டுபாக்கூர் அரசியல்வாதிகள் கட்ட பஞ்சாயத்து செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்.
குறிப்பு:- ஐ.எப்.எஸ். பைனான்ஸ் தற்போதைய நிலவரப்படி எஸ்கேப் ஆகிவட்டது. இதை பல்வேறு நாளிதழ்கள் உறுதிபடுத்திய நிலையில், அந்த பைனான்ஸில் போடப்பட்ட பணம் எங்கிருக்கிறது என்பது தானே முக்கியம். இந்த பணம் பரிமாற்றம் தொடர்பான விவரங்கள் மூன்று பெண்களுக்கு தெரியுமாம்.
அதைப்பற்றின விவரங்கள் விரைவில் வெளியாகும்.