ஆட்சியருக்கு மனு அளித்து வேஸ்ட்! கல்குவாரியை விரட்டியடிக்க தயாராகும் கிராம மக்கள்!
கு.அசோக்,
புதிய கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் புதிதாக அமையவிருக்கும் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமிரி அடுத்த நம்பரை ஊராட்சி மோகனாவரம் கிராமத்தில் ஏற்கனவே கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இவை விதிமுறைகளை மீறி செயல்படுவதால் ஏற்கனவே அப்பகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் கேள்வி குறியாகி உள்ளது.
இந்த நிலையில், வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் புதியதாக கல்குவாரியை அமைக்க தனியார் நிர்வாகம் முயற்சிக்கும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை கடந்த 25ம் தேதியன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதன் மீது நடவடிக்கை எடுக்கப்டவில்லை என்பதாக உணர்ந்த கிராம மக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இம்மக்களுக்கு சமூகபார்வை கொண்ட அமைப்புகள் கரம் நீட்டினால் போராட்டம் வெற்றி அடைய வாய்ப்புள்ளது.