ஓ..... லெஃப்ட் பாண்டி! அதிமுக... திமுக செய்ய தவறியதை, கச்சிதமாக செய்து உதவிய தவெக!

ம.பா.கெஜராஜ்,

   அரசு கட்டிக் கொடுத்த வீட்டிற்கு மின் இணைப்புக்காக பல ஆண்டு காலமாக போராடிய மலைவாழ் மக்களின்15 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக தமிழக வெற்றிக்கழகத்தினர் டெபாசிட் தொகையை செலுத்தினர்.      

   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையின் மேல் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையில்  உள்ளது அகமலை ஊராட்சி.

 போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள இந்த ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட  மலை கிராமங்கள் உள்ளன.

     மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கானலை கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசினால் 35 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

ஆனாலும் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. 

 மின் இணைப்பு வசதி கேட்டு இந்தப் பகுதி மக்கள் பல வருடங்களாக மாவட்ட நிர்வாகத்திடமும் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

    இருந்த போதிலும்  அவர்கள் இவர்களுக்கு உரிய பதில் வழங்காமல் இருந்து வந்த நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட தமிழக வெற்றி கழக்கத்தினர் மலைவாழ் மக்களுக்கு உதவ முன் வந்தனர்.

  அந்த வகையில்,  தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் லெப்ட் பாண்டி என்கின்ற பாண்டி சம்பந்தப்பட்ட கிராம மக்களை சந்தித்து 15 வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான டெபாசிட் தொகையான மொத்தம் 81 ஆயிரம் ரூபாயினை செலுத்துவதாக சொன்னார்.

   அதை மலைவாழ்மக்கள் முழுமனதாக ஏற்றுக் கொண்டனர். ஆகவே  15 குடும்பங்களுக்கு தனித்தனியாக மின் இணைப்பு வழங்குவதற்கான டெபாசிட் தொகையை மின்வாரியத்தில் செலுத்தி அதற்கான ரசீதை 15 குடும்பங்களை சந்தித்து நேரடியாக அவர்களிடம் ஒப்படைத்தார்.

  வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டி பலமுறை அந்த மக்கள் மனு அளித்த நிலையிலும் அது குறித்து அதிகாரி நடவடிக்கை எடுக்காத சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தினர் எங்களுக்காக முன்வந்து பணம் செலவிட்டிருக்கும்  செயல் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.

 இது குறித்து தவெகவின் தேனி மாவட்ட தலைவர் பாண்டி தெரிவிக்கையில், மின்சார வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் அவதிபடுகின்றனர் என்கிற தகவல் கிடைத்ததால் 15 குடும்பங்களுக்கு தேவையான மின்சார வசதிக்கான டெபாசிட் தொகையை கட்சி சார்பாக செலுத்தினேன் என்று பந்தா இல்லாமல் சொன்னார்.

விசாரித்த போது லெப்ட் பாண்டி, தமது சொந்த பணத்திலிருந்து இந்த டெபாசிட் தொகையை செலுத்தியது தெரியவந்தது.

 அதிமுக மற்றும் திமுக அரசு செய்ய தவறியதை தவெக செய்து காட்டியிருப்பது பலரின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.