வடமாவட்ட விவசாயிகள் வேதனை!

வடமாவட்ட விவசாயிகள் வேதனை!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்டம்,

வேலம் அம்மூர் பகுதிகளில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

இ£ணிப்பேட்டை மாவட்டத்தில் பெஞ்சல் புயலின் காரணமாக பெய்த தொடர் மழை பெய்ததால் பல பகுதிகளில் மழை வெள்ளத்தால் சாலைகள் அடித்து செல்லப்பட்டது. மேலும் வேலம் மற்றும் அம்மூர் ஆகிய பகுதிகளில்  சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமானது.

  உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பயிர் சேதங்களை கணக்கிட்டு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோருகின்றனர்

வேலூர் மாவட்டம்,

 அதே போல் வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த மேல்பாடி சிவபுரம் பகுதியில் சென்னை - பெங்களூர் அதி விரைவு சாலை பணிகள் நடந்து வருகிறது. அங்கு பெய்த மழையால் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது.

 பயிர்களில் தண்ணீர் தேங்காமல் எப்போதும் மழை நீரானது வீரந்தாங்கல் ஏரிக்கு சென்றுவிடும் ஆனால் சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை பணிகள் நடந்து வருவதன் காரணமாக தண்ணீர் முழுவதும் 20 ஏக்கர் பயிர்களில் மூழ்கி பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம்,

மேலும் திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர் சுற்றி உள்ள குனிச்சி, மொலகரம்பட்டி, எலவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் புயலின் தாக்கத்தால் நேற்று முதல் மிதமான மழை மற்றும் கனமான தொடர் மழை பெய்து வருகின்றது.

   கிணற்றில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடி வருகின்றது. நிலத்தடி நீர் உயர்ந்து வருகின்றது. விவசாயிகள் மகிழ்ச்சி ஒரு பக்கம் இருக்கையில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் வேதனை அடைந்துள்ளனர்.

   விவசாயி ஒருவர் கூறுகையில் நாங்கள் வங்கியிலும் தனி நபரிடமும் கடன் பெற்று நெல் பயிரிட்டு உள்ளோம். ஆனால் புயலின் தாக்கத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.     வாங்கிய கடனை எப்படி  திருப்பி செலுத்த போகிறதோ என்று தெரியவில்லை என்று வேதனை கலந்து பேசினார்.

   மேலும் விவசாயி ஒருவர் கூறுகையில் ஒரு சில விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாமல் உள்ளனர்ர்.  விவசாயிகளிடம் பயிர் சேதத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண இழப்பீடு வழங்க வேண்டும்

  பாரம்பரியமான நெல் வகையில் கருப்பு கவுனி நெல் சுமார் நான்கு ஏக்கர் பயிரிட்டுள்ளோம் 5 அடி உயரமுள்ள கருப்பு கவுனி நெல் மழையினால் சாய்ந்து சேதமானது அரசாங்கம் தான் எங்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்றார்..