பள்ளி கல்லூரி மாணவர்கள் மது குடிக்கின்றனர்! செல்லூர் ராஜூ வருத்தம்!

ம.கண்ணன்.
தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க சார்பில் பரவை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு தலைமை தாங்கிய பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது: குஜராத்தை பொறுத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோருக்கு சொந்த ஊர். எனவே அப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர்.
காசியில் தமிழ் பற்றி பேசியதால் அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வருகிற கட்சி. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும்.
அது பா.ஜ.க கையில்தான் உள்ளது.
தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
கோவை செல்வராஜ் ஏற்கனவே காங்கிரசில் இருந்தார். பின்னர் இப்போது தி.மு.க.வில் சேர்ந்துள்ளார்.
அவர் அடிக்கடி கட்சி மாறுவார். அ.தி.மு.க.வில் இருந்து கட்சி மாறியவர்கள் கூட தி.மு.க.வில் தற்போது அமைச்சர்களாக உள்ளனர்.
தற்போது தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடவில்லை, எங்கு பார்த்தாலும் போதை ஆறு தான் ஓடுகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் மட்டுமே மது குடித்த நிலை இருந்தது. ஆனால் தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மது குடிக்கின்றனர்.
பள்ளிகளுக்கு முன்பாக போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது. இதை பார்க்கும் போதும், கேட்கும் போதும் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார் செல்லூர் ராஜூ