வேலூர்  காட்பாடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு!

வேலூர்  காட்பாடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு!

கு அசோக்,
  வேலூர்மாவட்டம்,வேலூரில் பனிப்பொழிவானது இருந்து வருகிறது.  இரவு நேரங்களில் ஓரளவு வெப்பம் தாக்கம் இருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் காலை 9 மணி வரையில் வேலூர்,காட்பாடி வள்ளிமலை சேர்க்காடு ஆகிய பகுதிகளில் கடுமையான பனிபொழிவு இருந்தது.

  கடும் பனிப்பொழிவால் குளிர்ச்சி நடுநடுங்க வைத்தது. சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் ஏற்பட்டதால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிவிட்ட வண்ணம் சென்றனர். காலை 9 மணிவரையில் பனிமூட்டம் நீடித்ததால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் குளிரால் அவதியடைந்தனர்.