நெம்பர் பிளேட்டில் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள அனுமதி! 121 போலிஸ் வாகனங்கள் உட்பட 471 வழக்குகள்!

ம.பா.கெஜராஜ்,
வாகன நெம்பர் பிளேட்டில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தமிழக போக்குவரத்து தடைவிதித்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னரே அஇதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, வாகன உரிமையாலர்களே மே 1ம் தேதிக்குள் ஸ்டிக்கரை அகற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மறு தினம் 2 ஆம் தேதி சென்னையில் வாகனங்களின் நெம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் மட்டும் 471 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் வாகன சோதனை போக்குவரத்து போலீசாரால் நடத்தப்பட்டது.
அப்போது முதல் முறையாக விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசாரால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் முறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் 2-வது முறையாக இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, ஊடகம், டாக்டர், வழக்கறிஞர் என தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் மட்டும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீஸார் அனுமதி அளித்தனர்.
போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனை மற்றும் தணிக்கையின்போது அவர்களில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது.
அப்படியிருக்க வாகன நெம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னை போக்குவரத்து காவல்துறையால் 471 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 121 போலீஸ் வாகனங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த வாகன சோதனையால் சிறு அசம்பாவிதம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் (ஆர்ஐ) அந்தஸ்தில் இருப்பவர்கள் மட்டுமே இந்த வழக்கை கையாள உத்தரவிடப்பட்டுள்ளது.