பாதாள சாக்கடை திட்டத்தின் அவலங்கள்! கண்டு கொள்ளாத அதிகாரிகள்!

பாதாள சாக்கடை திட்டத்தின் அவலங்கள்! கண்டு கொள்ளாத அதிகாரிகள்!

கு.அசோக்,

சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளும்போது  எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றப்படாமல் பணியை மேற்கொள்வதால் தொடரும் விபத்துக்கள் தொடர்கிறது.

 வேலூர் மாவட்டம், வேலூர் வேலப்பாடி, பெரியதனம்  சுப்புராயன் தெரு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 அந்த பகுதியில் உள்ள சாலையின் ஓரம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாநகராட்சி சேர்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

 இந்த பள்ளத்தை தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்துள்ளது. ஆனால்  உடைப்பை சரி செய்யப்படாமல் பாதாள சாக்கை சாக்கடை பணியை மேற்கொண்டதுடன், தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக  மூடாமல் அப்படியே சென்றுவிட்டனர்.

 அந்த சாலையில் நடந்து செல்வோர், வாகனத்தை செல்வோர் உட்பட பலர் விழுந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் மேலும் குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு அந்த பள்ளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பி சேரும் சகதியமாக சாலை காட்சியளிப்பது ஆகவும் புகார் எழுப்பினார்கள்.

 இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் இந்த பள்ளத்தை மூடுவதற்கு முன் வரவில்லை.

 இந்த நிலையில் செங்கல்லை ஏற்றி வந்த லாரி சாலையோரம் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது.

   இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இதுபோன்று தரமற்ற முறையில் பணி செய்வதும், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளும் உள்ளது.

  மக்களின் நலனை கருதில் கொண்டும் இது போன்ற பணிகளை விரைந்து முடிக்கவும், தரமான முறையில் பொதுமக்களுக்கு திட்டங்களை செய்து தர வேண்டும், பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் போது மாநகராட்சி ஊழியர்கள், ஒப்பந்ததாரர்களும் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற பணியை மேற்கொள்ள வேண்டும்  என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 மேற்கண்ட சாலை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வசிக்கும் வீட்டு தெருவுக்கு பின்பக்கத்தில் உள்ளது.

மேலும் லாரி சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி சாயம் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது