திருப்பத்தூர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்றவர்கள் கைது!

திருப்பத்தூர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்றவர்கள் கைது!

ஜி.கே.சேகரன்,

அரசு மதுபான கடையை பூட்டு போட வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினருடன் விவசாயிகள் வாக்குவாதம்..    மதுபானகடைகளை பூட்டாவிட்டால், தலைமைசெயலகத்தை பூட்டு போடுவோம் விவசாயிகள் எச்சரிக்கை.

  தமிழகம் முழுவதும், தென்னை மற்றும் பனை மரத்தில் இறக்கும் கள்ளுக்கடையை திறக்க வலியுறுத்தியும், மதுபான கடைகளை மூட வலியுறுத்தியும் திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கோடி பகுதியில் உள்ள மதுபான கடையை  பூட்டு போட வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் தடுத்தனர்.

  இப்படி தடுத்து நிறுத்தியதால், விவசாயிகள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து, விவசாயிகள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி, அரசு மதுபான கடைகளை தமிழக அரசு மூடவிட்டால், தலைமை செயலகத்திற்கு பூட்டு போடுவோம், என விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்