புகாரை பெறாமல் அலைகழித்த பள்ளிகொண்டான் போலீசார்! சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மெத்தனம்!

புகாரை பெறாமல் அலைகழித்த பள்ளிகொண்டான் போலீசார்! சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மெத்தனம்!

ஜி.கே.சேகரன்,

வேலூர் அருகே 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் 13வயது சிறுமி. இவர் கடந்த 17 ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் (வயது 28), இளமதன் ( 28), சின்ராஜ் (30) ஆகியோர் மது அருந்திக்கொண்டு இருந்தனர்.

  சிறுமி தனியாக இருப்பதை அறிந்த இவர்கள் 3 பேரும் சிறுமியின் வாயைப் பொத்தி அப்பகுதியில் உள்ள கல்குவாரிக்கு தூக்கிச் சென்றனர்.அங்கு வைத்து சிறுமியை 3 பேரும் சேர்ந்து சிறுமியை அடித்து உதைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

 வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிக்க சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மகளை தந்தை தேடினர்.

  அப்போது அங்குள்ள கல்குவாரி அருகே வந்த போது மகளின் அலரல் சத்தம் கேட்டது. உடனடியாக கல்குவாரிக்கு விரைந்து சென்றார்.

   சிறுமியின் தந்தை வருவதை அறிந்த 3 பேரும் அங்கிருந்து இருளில் தப்பி சென்றனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். பள்ளிகொண்டா போலீசார் சம்பவ நடந்த இடம் வேப்பங்குப்பம் என புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பினார்.

   வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்த போது அவர்கள் பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்ய அனுப்பி வைத்தனர்.

   போலீசார் புகாரை வாங்க மறுத்து அலை கழித்ததால் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

  இதையடுத்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க அணைக்கட்டு டிஎஸ்பி சாரதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் சித்தூரில் பதுங்கி இருந்த வீரப்பன், இளமதன்,சின்ராஜ் ஆகியோரை இரவு கைது செய்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

  அவர்களை ஆய்வாளர் காஞ்சனா போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.

 கூட்டு பாலியலுக்கு ஆளாக்கப்பட்ட சிறூமி தரப்பில் புகார் வாங்க மறுத்து அலைக்கழித்த சம்மந்தப்பட்டவர்கள் மீது காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர்.