சொந்தமாக கட்டப்பட்ட கட்டிடத்தை அற்பணித்த பத்மஸ்ரீ. ஸ்ரீதர்வேம்பு!

க.பாலகுரு,
இலவச மாலை நேர பல்துறை பயிற்சி வகுப்பு கட்டிடத்தை" பத்மஸ்ரீ. ஸ்ரீதர்வேம்பு திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே தென்குடி அங்காளி புரத்தில் ஸ்ரீஅங்காளம்மன் சக்திபீடம் சேவா டிரஸ்ட் சார்பில் அன்பு இல்லம் எனும் இலவச காப்பகம் திறக்கப்பட்டது..
இந்த நிகழ்வில்..ZOHO (சோஹோ) நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாணவ மாணவியர்களுடன் உரையாடினார் பின்னர் அவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், சிலேட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், வரும் காலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் கல்விக்கான பணிகளை இங்கு துவக்க உள்ளதாகவும், ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
ஸ்ரீ அங்காளம்மன் அறக்கட்டளையின் சார்பாக மாலை நேர பல்துறை பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அதிக மதிப்பெண் பெற ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ மாணவியர்களுக்கு தினசரி பயிற்சி வகுப்புகள் மற்றும் பல்துறை திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது..
இந்த பயிற்சிகள் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் தற்பொழுது இதற்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு இன்று பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நன்னிலம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் இலக்கியா, தமிழ் சேவா சங்கத்தின் அறங்காவலர் ஞான சரவணவேல் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். ஸ்ரீ அங்காளி சித்தர் அப்புவர்மா சாமிகள் மற்றும் காயத்ரி அப்புவர்மா சாமிகள் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது