போக்குவரத்து சீர்கேட்டை ஏற்படுத்தும் கிரீன் சர்க்கிள்! களமிறங்கிய பொதுமக்கள்!

போக்குவரத்து சீர்கேட்டை ஏற்படுத்தும் கிரீன் சர்க்கிள்! களமிறங்கிய பொதுமக்கள்!

ஜி.அசோக்,

 கிரீன் சர்க்கிள் பகுதியில் சிக்னல் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் காயம் அடைந்தார். அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  காவலர்கள் இல்லாததால் பொது மக்களே போக்குவரத்தை சீர்படுத்தினார்கள்.

 வேலூர் மாவட்டம் ,வேலூர் நகரின் மையப்பகுதியில் கிரீன் சர்க்கிள் என்கிற பெயரில் பெரிய அளவிளான ரவுண்டானா உள்ளது.

 சாலையின் அளவு குறைவாகவும், ரவுண்டானாவில் சுற்றளவு அதிகமாக காணப்படுவதாலும், அந்த பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

  இந்நிலையில் அந்த பகுதியில் திங்கட்கிழமையான இன்று பொதுமக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

  அப்பொழுது, காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. கிரீன் சர்க்கிள் அருகே வந்த பொழுது அருகில் இருந்த சிக்னல் கம்பத்தின் மீதும் மோதியது.

  மேலும் சாலையில் சென்றுக்கொண்டிருந்த டிராக்டர் மீதும் மோதியது.

  அதில் வந்த ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

  உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓட முயன்ற லாரி டிரைவரை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பிடித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.      இந்த விபத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

   மேலும் விபத்து நடந்த நேரத்தில் அங்கு காவலர்கள் பணியில் இல்லை. டிராபிக் ஜா ஏற்பட்ட பின்னர் அரை மணி நேரத்துக்கு மேலாகியும்  போக்குவரத்து போலிசார் அந்த பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

  எப்போதுமே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் அந்த பகுதியை சீரமைக்கப்போவதாகவும், தீவு போன்று தேவையற்று கிடக்கும் பகுதிகளை அகற்றூவதாகவும் கடந்த ஆண்நு இருந்த ஆட்சியர் அறிவித்தார், அதே போல் தற்போதைய கலெக்டரும் அறிவுப்பு செய்துள்ளார்.

  ஆகவே அந்த அறிவிப்பினை நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் ஏற்று உடனடியாக நடைமுறைப்படுத்தி பொது மக்களின் இன்னல்களை போக்க வேண்டும் என்பது பலரின் அவா?