நாய் தலையில் உடைந்த பிளாஸ்டிக் குடம்!  கலெக்டர் முன்னிலையில் அகற்றம்!

நாய் தலையில் உடைந்த பிளாஸ்டிக் குடம்!  கலெக்டர் முன்னிலையில் அகற்றம்!

த.நெல்சன்,

 வேலூர் மாவட்டம் கொணவட்டத்தில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.04.2023) பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது வீட்டு பிராணியான நாய் மற்றும் பசு மாடு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேரில் பார்த்ததுடன், மருத்துவ வளாகத்தை இன்னும் சுத்தமாக வைத்துக் கொள்ள பணியாளர்களிக்கு அறிவுறுத்தினார்.

 அப்போது நாய் தலையில் பிளாஸ்டிக் குடம் ஒன்று உடைந்த நிலையில் சிக்கியிருந்தது. இதனால் அந்த நாய் மிகவும் பாதிப்படைந்திருந்தது.

 அதனை உடனே அகற்றும்படி கலெக்டர் சொன்னதன் பேரில், கால்நடை மருத்துவர்கள் லாவகமாக கழற்றி நாயை காப்பாற்றினார்கள். அதற்காக கலெக்டர் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

 மேற்படி ஆய்வின் போது கால்நடை துறை இணை இயக்குநர் (பொ) மரு.உதயகுமார், பிரதம மருத்துவர் நாசர், மருத்துவர்கள் ரவிசங்கர், சுப்பிரமணி, தினேஷ் குமார் மற்றும் கவிபிரியா, வேலூர் வட்டாட்சியர் திரு.செந்தில்குமார், கால்நடை துறை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.