காய் கறி வாகனத்துக்கு தீ! முன் பகை காரணமா?

காய் கறி வாகனத்துக்கு தீ! முன் பகை காரணமா?

  ஜி.கே.சேகரன்,

  ஆம்பூர் அருகே கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா ஏசி( மினி வேன்) வாகனத்திற்கு நள்ளிரவில்  மர்ம நபர்கள் வைத்த தீயால் முற்றிலும் எரிந்து எலும்பு கூடு போல் நிற்கும் வாகனம், காய்கறி வியாபாரம் செய்து தன் பிழைப்பை நடத்தி வந்ததாகவும், வாகனத்திற்கு மர்ம நபர்கள் வைத்த தீயால் என்ன செய்வது அறியாமல் தவித்து நிற்கும் காய்கறி வியாபாரிஇது போன்ற சமூக விரோத செயல்களால் அச்சத்தில் மக்கள்.

   திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக துத்திப்பட்டு பகுதியில் கடை ஒன்று வாடகை எடுத்து அதன் முன்பாக டாடா ஏசி வாகனத்தில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

  வழக்கம் போல் நேற்று வியாபாரத்தை முடித்து கடை முன் வாகனத்தை நிறுத்தி  விட்டு  கடையில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென டாடா ஏசி வாகனம் மர்ம நபர்கள் வைத்த தீயால் கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் சீனிவாசனுக்கு தகவல் அளித்துள்ளனர்.

  அலறியடித்து வெளியே வந்து பார்த்தபோது வாகனம் தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

 தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டும் தீ மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் முற்றிலும்  எரிந்து எலும்புக்கூடு போல் ஆனது.

  இது தொடர்பாக சீனிவாசன் தெரிவிக்கையில் கடந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தன் வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பை நடத்தி வந்தேன், தற்போது மர்ம நபர்கள் வைத்த தீயால் வாகனம் முழுவதும் எரிந்ததில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான வாகனம் மற்றும் காய்கறிகள் எரிந்து நாசமானது.

   சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு  தன் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

   இதுகுறித்து வழக்கு பதிவு செய்த உமராபாத் காவல் துறையினர் டாடா ஏசி வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.