பாலாற்றில் பால் ஊற்றி பூஜை! தோல் தொழிற்சாலைகளால் நாசமாவதை தடுக்க திட்டம்!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் நீர்நிலைகளை பாதுகாக்கவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும் வேண்டி பால் குடங்கள் மஞ்சள் சந்தன குடங்கள் எடுத்து வந்து பாலாற்றில் சிறப்பு வழிபாடு பூஜைகளும் செய்யப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடந்தது.
வேலூர் மாவட்டம், வேலூரில் அகில பாரதிய சாதுக்கள் சன்னியாசிகள் சங்கம் சார்பில் வேலூரில் உள்ள மகா விஷ்னு துர்கையம்மன் ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பாலாறு அம்மனை வணங்கினர்.
முன்னதாக நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் பால், மஞ்சள், சந்தனம் ஆகியவைக அடங்கிய குடங்கள் சுமந்து ஊர்வலமாக பாலாற்றுக்கு வந்தனர்.
வேலூர் பாலாற்றில் ஆறுகளில் குப்பைகள் மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகளை கொட்ட கூடாது நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டுமென விழிப்புணர்வை ஏற்படுத்தி சாது சன்னியாசிகள் பாலாற்றில் பாலாறு அம்மனை வைத்து அபிஷேகம் செய்ய வைத்தனர். குறிப்பாக பகதர்களுக்கு அந்த பணி அளிக்கப்பட்ட்டது.
பின்னர் பாலாறு அன்னைக்கு நீரை பாதுகாக்கவும் வகையில் பூஜைகள் செய்து மகாதீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது
இந்த பாலாறு பெருவிழா ரத யாத்திரை நாளை விரிஞ்சிபுரத்திலும் நாளை மறுதினம் 4 ஆம் தேதி ஆற்காட்டிலும் இறுதியாக காஞ்சிபுரம் பாலாற்றில் 5 ஆம் தேதி பூஜைகளுடன் நிறைவடைகிறது.
அப்படியே இந்த சன்னியாசிகள் மாசுகட்டுபாட்டு அதிகாரிகளுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்றும் யாகம் செய்தால் பாவம் பாலாறு பிழைக்கக்கூடும்.