சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் வோலூர் கோட்டை! கட்டிடங்கள் பாழ்!!கண்டு கொள்ளாத அதிகாரிகள்!!!

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் வோலூர் கோட்டை! கட்டிடங்கள் பாழ்!!கண்டு கொள்ளாத அதிகாரிகள்!!!

ஜி.கே.சேகரன்.

ஆசியாவிலேயே புகழ் பெற்ற வேலூர் கோட்டையில் பல கோடி ரூபாய் கட்டிடங்கள் பராமரிக்காததால் பாழடைந்து வருகிறது. இதனை காணும் மக்கள் வேதனையடைந்து வருகின்றனர்.

  வேலூர் மாவட்டம், வேலூரில் விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி ஏற்பட்ட வேலூர் கோட்டை தொல் பொருள் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து அரசு அலுவலகங்களும் கோட்டையின் உள் தான் இயங்கி வந்தன. இதனால் ஆங்கிலேயர் காலத்திலிருந்து கட்டப்பட்ட பல கட்டிடங்கள் பல கோடிரூபாய் மதிப்புள்ள இக்கட்டிடங்கள் கோட்டையினுள் இருக்கிறது.

 அங்கு செயல்பட்டு வந்த அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றாக கோட்டைக்கு வெளியில் புதிய கட்டிடங்களை கட்டி கொண்டு சென்றுவிட்ட நிலையில் பல கட்டிடங்கள் கோட்டையினுள் காலியாகவே கிடக்கிறது. இவைகளை பராமரிக்க வேண்டிய இந்திய தொல் பொருள்துறை கண்டுகொள்வதே கிடையாது, இதனால்  கோட்டையினுள் உள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்து வருகிறது.

  காதல் ஜோடி தஞ்சமடையவும், சமூக விரோத செயல்களான கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத கும்பல் கோட்டையினுள் உள்ள கட்டிடங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

¢ ஆசியாவிலேயே புகழ் பெற்ற தரைக்கோட்டை அகழியோடு இன்றும் கோட்டையினுள் உள்ளது. இங்கு இரண்டு அரசு அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகிறது. அத்துடன் காவலர் பயிற்சி பள்ளியும் இங்குதான் செயல்படுகிறது.

 மேலும் கோட்டையை அழகுபடுத்த மதில் சுவர் மேல் சிப்பாய் நிற்பதை போல் பல லட்சம் செலவு செய்து சிலகள் வைக்கப்பட்டு விளக்குகள் அமைக்கப்பட்டது. இவைகளும் ஒவ்வொன்றாக காணாமல் போனது.

  பல லட்சம் செலவும் செய்து இரவில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் கோட்டையின் மீதே தயாரிக்கப்பட்டு விளக்குகள் அமைக்கப்பட்டன. அவைகளும் களவு போனது.

   தற்போது பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டையின் உட்புறமும்,  கோட்டையின் வெளியிலும் விளக்குகளை அமைத்தனர் ஆனால் அந்த விளக்குகளும் தற்போது காணாமல் போகிறது.

  இக்கோட்டைக்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு மேல் சுற்றுலாவாக வந்து செல்கின்றனா. ஆனால்¢ கோட்டையை பராமரிக்க வேண்டிய தொல் பொருள் துறை ஒரு பணியை கூட செய்யவில்லை.

  இதனால் கோட்டையினுள் உள்ள பல கோடி மதிப்புடைய கட்டிடங்கள்  சிதிலமடைந்து வருகிறது மத்திய அரசு உடனே நிதியை ஒதுக்கி இவைகளை பராமரித்து வேலூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் வகையில் கட்டிடங்களை பயன்படுத்த வேண்டும் அல்லது பெரிய தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து இக்கடிடங்கள் சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்காக அதனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

  இங்குள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் தங்கத்தேரும் பராமரிக்கபடாமல் வெட்ட வெளியில் உள்ள அதன் மதிப்பு ரூ,5 கோடியாகும் அதற்கு கூட இடம் ஒதுக்கி தரவில்லை. தொல் பொருள்துறை கோட்டை மதில்களிலும் செடிகொடிகள் நிறைந்து புதர் போல் காட்சியளிக்கிறது அதனை தொல் பொருள்துறை ஊழியர்கள் அப்புறப்படுத்தாததால் புதர் மண்டி காட்சியளிக்கிறது மேலும் கோட்டை பூங்காவையும் பராமரிக்காததால் தொடர்ந்து குற்ற செயல்களுக்காக இந்த இடங்கள் பயன்பட்டு வருகின்றன.

  எனவே சுதந்திரத்திற்காக வித்திட்ட இந்த கோட்டை வருங்கால சந்ததியினர் பயன்பெறும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  "அதுமட்டுமின்றி கோட்டை சுற்றியுள்ள வேலியில் இருந்து 100 மீட்டர் தூரம்வரைக்கும் தனியார் எவரும் கட்டிடம் கட்டக்கூடாது என்கிற விதி இருந்தும் அதை பலர் பின்பற்றாமல் கட்டிடங்களையும், விடுதிகளையும் கட்டி வியாபாரங்களை செய்து வருகின்றனர்".

  இது தொடர்பாக பலர் தொல்பொருள் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது அந்த புகாரை வடக்கு காவல் நிலையத்துக்கு பரிந்துரை செய்துவிட்டதாக சொல்லி, விதிமுறை மீறி கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை வேடிக்கை அவர்கள் பார்த்து வருகிறார்கள்.