நவீன தொழில்நுட்பங்களை பெண் காவலர்கள் அறியுங்கள்!

கு.அசோக்,
பெண் காவலர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப உலகத்தில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து திறனை வளர்த்துகொண்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் பெண்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் காவல்துறை மாநில குற்ற ஆவண காப்பகத்தில் கூடுதல் இயக்குநர் வினித் தேவான் கேடே பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு பேச்சு.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையினுள் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் பெண்காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில குற்ற ஆவண காப்பகத்தின் காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தே வான் கேடே கலந்துகொண்டு பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு அவர்களில் சிறப்பாக பயிற்சி முடித்தவர்களுக்கு பரிசுகள் சான்றுகள் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்
பின்னர் பெண் காவலர்கள் நெருப்பு வளையத்தில் குதித்து உள்ளே சென்று வருதல் கராத்தே மூலம் ஓட்டை உடைத்த சிலம்பாட்டம் உள்ளிட்ட வீர சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.
பின்னர் விழாவில் மாநில குற்ற ஆவண காப்பத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் வினித் தே வான் கேடே பேசுகையில் நாம் நமது பொறுப்பறிந்து செயல்பட வேண்டும் இன்று நீங்கள் பயிற்சியை முடித்தாலும் மக்களுக்கு உங்கள் சேவையை செய்ய வேண்டும் மன உறுதியுடன் இருக்க வேண்டும் தொழில் நுட்ப காலத்தில் நீங்கள் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும் அந்த திறன் என்பது மிகவும் அவசியம் என்று பேசினார்