திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு பண்ணை!

திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு பண்ணை!

 கு.அசோக்,

   திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் புதர்கள் நிறைந்து காடு போல் காட்சியளிப்பதால்  பாம்புகளின் நடமாட்டம் தொடர்ந்து வருகிறது.

   சில நாட்களுக்கு முன்பு நடுத்தரமான மலைப்பாம்பு மரத்தின் மீது ஏறி சுருண்டு இருந்த பொழுது சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களில் ஒருவர் தீயணைப்பு காவலர்களுக்கு தகவல் கொடுத்து பிடித்தனர்.

  அதன் பிறகு பலமுறை சாரைப்பாம்பு நாகப்பாம்பு உள்ளிட்ட பலதரப்பட்ட இனங்களைச் சார்ந்த பாம்புகள் பிடிபட்டு கொண்டு இருக்கின்றன.

   இந்நிலையில் இன்று சுமார் 3 அடி நீளம் உள்ள கொடிய விஷம் நிறைந்த கண்ணாடி விரியன் பாம்பு நடமாட்டத்தை அறிந்து, சார் ஆட்சியர் அலுவலக ஊழியர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தின் அடிப்படையில் நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வந்த தீயணைப்பு காரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து எடுத்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

   பல பிரச்சனைகளுக்காக சார் ஆட்சியை சந்திக்க அதிக அளவில் தினம் தோறும் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் நச்சுப் பாம்புகளின் நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.