கலெக்டரை தத்தளிக்கவைத்த கரூர் எம்.பி.ஜோதிமணி!

ம.தமிழரசன்,
எம்.பி. நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதியை தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தை நடத்ததுவதற்கு பல முறை வலியுறுத்தியும் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி யிடம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து மாவட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தரையில் அமர்ந்து மனுவை வாங்கி பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டாத நிலையில், ஜோதிமணி எம்.பி. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது கலெக்டருடன் நேரடி வாக்குவாதத்தில் ஜோதிமணி ஈடுபட்டார்.
தூத்துக்குடியில் நடத்தும் இது போன்ற முகாம்களுக்கு கனிமொழி எம்.பி.கலந்து கொள்கிறார். அவருக்கு முறையாக அழைப்பு போகுது.
அதே போல் தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களில் எம்.பிகளுக்கு தகவல் கொடுத்து பின்னர் முகாம்கள் நடத்தப்படுகிறது.
எங்கள் ஊரில் எங்கெல்லாம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.
ஆகவே முகாம் குறித்து தகவல் தெரிந்தால் நாங்கள் ஊர் ஊராக அறிவிப்பு செய்து வாகனங்கள் வைத்து அவர்களை அழைத்து வருவோம்.
வெறும் 90 பேரை வைத்துக்கொண்டு முகாம் நடத்துவதில் அர்த்தம் இல்லை.
எனக்கு தகவல் தெரிவித்திருந்தால் ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் வந்திருப்பார்கள் என்று பொங்கினார்.