செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டாதீர்! வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்!

ஜி.கே.சேகரன்,
கைபேசி பேசிகொண்டோ கவணக்குறைவாகவோ வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்க கூடாது விபத்தில் சிக்குபவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி செய்து அவரச சிகிச்சை பிரிவில் சேர்க்க சமூக நோக்குடன் அனைவரும் முன் வரவேண்டும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்னுயிர் காப்போம் திட்ட விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்து பேச்சு
வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டை அருகில் உள்ள காந்தி சிலை அருகில் இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.
இதில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி, அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரியின் மருதுவமனையின் முதல்வர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று ஊர்வலத்தை துவங்கி வைத்தனர்.
இதில் மருத்துவக்கல்லூரி செவிலியர், கல்லூரி மாணவ,மாணவிகள் கையில் படியில் பயணம் செய்ய கூடாது பேருந்துகளில் செல்போன் பேசி வாகனம் ஓட்ட கூடாது சாலைவிதிகளை மதிக்க வேண்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று நகரின் முக்கிய வீதிகளின் வழியாகவும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இதே போன்று வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு மருத்துவ முகாமினை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார் பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே ஆவின் நிறுவனத்தின் விற்பனை மையம் ஒன்றையும் துவங்கிவைத்தார்
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் கைபேசியில் பேசிய படி வேடிக்கை பார்த்துகொண்டும் வாகனத்தை ஓட்ட கூடாது வாகன ஓட்டுநர்கள் டேக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் ஒருவரை ஒருவர் முந்திகொண்டு போட்டி போட்டு செல்ல கூடாது அவசரமாகவும் வேகமாகவும் வாகனத்தை ஓட்ட கூடாது இவ்வாறு செய்தால் விபத்துக்களை தடுக்க முடியும் இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்து விதிகளை மீறுவோர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் விதிக்கிறோம் விபத்தில் ஏற்படும் இழப்புகள் பொருளாதாரமாகவும் உடல் நலமும் பாதிக்கப்பட்டும் இழப்பு ஏற்படுகிறது சில விபத்து ஏற்படும் இடங்களையும் கண்டறிந்துள்ளோம் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க காவல்துறையினர் உள்ளிட்டோர் மக்களுக்கு உதவி காப்பாற்ற வேண்டுமென பேசினார்.