ஐந்து கோடி வரை சீட்டு பணம் மோசடி!

ஐந்து கோடி வரை சீட்டு பணம் மோசடி!

கு.அசோக்,

  சீட்டு நடத்தி  ரூபாய் ஐந்து கோடி வரை மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து  பணத்தை மீட்டு தர கோரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

 வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த  எஸ்.டி.எம், மோகன் என்பவர்  மற்றும் அவரது மகன் ராஜேஷ்  ஆகிய இருவரும் மாத சீட்டு நடத்துவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்

    இதை  நம்பி  பொதுமக்கள் வேலூர் திருப்பத்தூர்  ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த  பொதுமக்கள் 2லட்சம் முதல் 4 லட்சம் வரை  பணம் கட்டி வந்துள்ளனர்.

 இந்நிலையில், சுமார் ஐந்து கோடி வரை  பணத்தை வசூல் செய்து கொண்டு எஸ்.டி.எம் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் கட்டிய பொது மக்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றியதுடன் கொலை மிரட்டல் விடுத்து  பின்பு தலைமுறைவாகியுள்ளனர்.

  அவர்களை கைது செய்ய கோரியும்,  பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த அனைவருக்கும் பணத்தை மீட்டு தர கோரியும்  பாதிக்கப்பட்டவர்கள்   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் அளித்தனர்.