தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு! சுற்றுச் சூழல் பொறியாளருக்கு பாராட்டு!

ஜி.கே.சேகரன்.
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரை நிலத்தில் வெளியேற்றிய தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டித்து மூட உத்தரவு.மாசு கட்டுப்பாடு வாரியம் மாவட்ட பொறியாளர் அதிரடி நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீரை நேரடியாக பாலாறு மற்றும் அருகிலுள்ள நிலத்தில் வெளியேற்றி வருவதாக மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணனுக்கு தொடர்ந்து வந்தது.
அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு இயங்கி வரும் டெக்கன் டேனிங் கம்பெனி என்ற தனியார் தோல் தொழிற்சாலை நிர்வாகம் கழிவு நீரினை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் நிலத்தின் மேல் வெளியேற்றி வருவதும், மேலும் அபாயகரமான பொருட்களை கையாளு வதற்குரிய உரிமம் பெறாமல் தொழிற்சாலை இயங்கி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த தொழிற்சாலையை மூடி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரினையோ அல்லது திடக்கழிவுகளை நிலத்தின் மேல் அல்லது நீர் நிலைகளில் வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என்றும், மேலும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீப காலமாக வாணியம்பாடி மாசு கட்டுபாட்டு வாரியத்தின் சுற்றுச் சூழல் பொறியாள மேற்படியான தோல் தொழிற்சாலைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் குறிப்பாக சுற்றுச் சூழல் பொறியாளருக்கு பாராட்டுக்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்