நிர்வாணப்படுத்தி தாக்கிய காவலர்கள்! சட்ட கல்லூரி மாணவர் புகார்!

ராஜேஷ் குமார்,
என்னை நிர்வாணப்படுத்தி விடிய விடிய தூங்க விடாமல் போலீசார் தன்னை சித்திரவதை செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை, வியாசர்பாடி, புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் (22). இவர் தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5ம் ஆண்டு படித்து வருகிறது. கல்லூரியில் படித்துகொண்டே பகுதி நேர வேலையும் அவர் செய்து வருகிறார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து அப்துல் ரஹீம் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டுமாறு அப்துல் ரஹீமிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு அப்துல் ரஹீம் தான் முகக்கவசம் அணிந்து வந்ததால் அபராதம் கட்ட முடியாது என்று கூறியுள்ளார்.
இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவலரை தாக்க முயன்றதாக கூறி அப்துல் ரஹீமை, போலிசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் ரஹீமை அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும், முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்துல் ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, நான் சம்பவத்தன்று முகக்கவசம் அணிந்து கொண்டுதான் வந்தேன்.
ஆனால் ஒழுங்காக அணியவில்லை என்று போலீசார் அபராத தொகை செலுத்த கூறினார்கள். அதற்கு நான் முடியாது என கூறியதால் அசிங்கமாக திட்டி வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர்.என்னை நிர்வாணமாக்கி இரவு முழுவதும் காவல் நிலையத்தில் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து போலீசார் காயப்படுத்தினர்.
அங்கிருந்த பீரோவில் முட்டி தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. சிகிச்சையும் கொடுக்கவில்லை, பசிக்கு சாப்பாடும் வாங்கிக் கொடுக்கவில்லை.எனவே எனக்கு காயம் ஏற்படுத்திய காவல் துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.