கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு! நான்கு போலிசார் மீது எஸ்.பி.நடவடிக்கை!

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு! நான்கு போலிசார் மீது எஸ்.பி.நடவடிக்கை!

ஜி.கே.சேகரன்.

 கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த நான்கு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவிட்ட எஸ்.பி.

 திருப்பத்தூர்மாவட்டம், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த தாலுகா ஸ்டேஷன் சிறப்பு எஸ்எஸ்ஐகள் சிவாஜி மற்றும் வெண்ணிலா. ஏட்டு வசந்தா மற்றும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் கோபி உட்பட 4 பேரை எஸ்பி ஆல்பர்ட் ஜான், ஆயுதப் படைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

 இது குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, மேற்குறிப்பிட்ட 4 பேரும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் சேர்ந்து, சாராயம் காய்ச்சவும், விற்பனை செய்யவும் உறுதுணையாக இருந்துள்ளனர். இதற்காக அவர்கள் பணமும் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை மற்றும்  ஆல்பர்ட் ஜான் பொறுப்பேற்றத்தில்  இருந்து செய்யும் நடவடிக்கைகள் குறித்த அனைத்தையும் சாராய வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 இதனை கள ஆய்வு செய்து இவர்கள் நான்கு பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆயுதப்படைக்கு மாற்றினார்.