சட்டம் ஒழுங்கு பிரச்சனை! ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

ம.பா.கெஜராஜ்,
ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்து புகார் அளிப்பதற்காகவே இந்த சந்திப்பு என கூறப்படுகிறது.
காலை 11 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நிலவுவதாகவும் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அதிமுக ஏற்கனவே குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிப்பார் என கூறப்படுகிறது.
முக்கியமாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி முறையிடுவார் எனக் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் செல்ல உள்ளனராம்.