ஸ்மார்ட் சிட்டிம்:- திட்ட துட்டை மாற்று திட்டத்துக்கு பயன்படுத்துவதா! புஸ்ஸ்ஸ்ஸ் ஆன அதிமுக கவுன்சிலர்கள்!

ஸ்மார்ட் சிட்டிம்:- திட்ட துட்டை மாற்று திட்டத்துக்கு பயன்படுத்துவதா! புஸ்ஸ்ஸ்ஸ் ஆன அதிமுக கவுன்சிலர்கள்!

ம.பா.கெஜராஜ்,

  சேலம் மாநகராட்சிக்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிதியை எடுத்து செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. 

  இந்த மாநகராட்சியில் திமுக மேயராக ராமச்சந்திரன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டு வருகின்றன. போதிய நிதி இல்லாத காரணத்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிதியை எடுத்து செலவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல்வேறு திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியாத நிலையும் உள்ளதாம்

  அப்படியிருக்க இந்த திட்டத்தை தனியார் கைகளில் ஒப்படைக்க திட்டமாம்.

  இதுதொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக நிறைவேற்ற நினைக்கும் தீர்மானத்திற்கு அக்கட்சி கவுன்சிலர்களிடம் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    இவர்களுடன் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்களும் கைகோர்க்க மாநகராட்சி கூட்டங்களில் பிரச்சனை எழுந்து வருகின்றன. எனவே குடிநீர் திட்டத்தை தனியாருக்கு விடும் முடிவை சேலம் மாநகராட்சி கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் திமுக கவுன்சிலர்களை தேவையில்லாமல் பேசக்கூடாது என்று மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

  இந்நிலையில் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ஆர்.ராஜேந்திரன் அவர்களும் சில அறிவுரைகள் வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சேலம் மாநகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது தனியாரிடம் ஒப்படைக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த 8 மாதங்களாக சரியான வரவு, செலவு கணக்கு காட்டாமல் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.

    உடனே மேயரின் இருக்கைக்கு அருகே சென்ற அதிமுக கவுன்சிலர்கள் அங்கு அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த திமுக கவுன்சிலர்கள் வெளியே சென்று கண்டிக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அதிமுக கவுன்சிலர்களை கூட்டத்தில் இருந்து அப்படியே தள்ளிக் கொண்டே சென்று வெளியே தள்ளினர்.

   வெளியே சென்ற அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து மேயருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆனாலும், திமுக கவுன்சிலர்களைக் கொண்டு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அவர்களுக்கு மேயரும், சட்டமன்ற உறுப்பினரும் ஏற்கனவே வாய்ப்பூட்டு போட்டு விட்டதால் கவுன்சிலர்கள் அனைவரும் அமைதியாக இருந்ததாகவும்,  அப்போது கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாம்.