கை காலை உடைப்பேன் "சாயங்காலத்துக்குள்ள கம்பெனியை இழுத்து மூடிடுவேன்" எம் .எல் .ஏ.வின் சவுண்டு!

தாம்பரம் முரளி,
கை காலை உடைப்பேன் "சாயங்காலத்துக்குள்ள கம்பெனியை இழுத்து மூடிடுவேன்" என்று எம்.எல்.ஏ. ஒருவர் சவுண்டு விட்டார், பதிலுக்கு தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவர் அவரை எதிர்த்து நிற்க அங்கு பரபரப்பான காட்சிகள் ஓடியது.
இது பற்றின விவரம் வருமாறு,
செங்கல்பட்டு தொகுதிக்குள் வரும் மறைமலைநகரில் கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை(DAEJUNG) மையப்படுத்தி பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்காக தாம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.ராஜா. பஞ்சாயத்து பேசியுள்ளார்.
அப்படியிருக்க டீல் சரியாக முடியாத நிலையில் ராஜா அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.
அப்போது நிர்வாக தரப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் சட்டமன்ற உறூப்பினர் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வீடியோ கேமிராவை வைத்துக் கொண்டு நிர்வாகம் தரப்பினர் சட்டமன்ற உறுப்பினரிடம் பேசி அவரை வெறுப்பேற்றினர்.
அப்போது எஸ்.ஆர்.ராஜா “சாயங்காலத்துக்குள்ள கம்பெனியை இழுத்து மூடிடுவேன்” என மிரட்ட, எதிர்பார்ட்டி “முடிஞ்சா கம்பெனியை இழுத்து மூடுங்க பார்க்கலாம்” எனச் சவால் விட்டார்.
டேய் “நீ சிங்கப்பெருமாள் கோவில் ஆளு... நீ யார்னு தெரிஞ்சுதான் உள்ள வந்திருக்கேன்” என நிர்வாக தரப்பு ஆளை மிரட்டினார்.
உங்களுக்கு “ஓட்டுப் போட்ட கட்சி ஆளுங்களுக்கே நீங்க மரியாதை கொடுக்கல, கட்சிப் பிரதிநிதியை மிரட்ட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்கிட்ட உறுப்பினர் அட்டை உள்ளது என்று எகிறினார்.
கடுப்பான எஸ்.ஆர்.ராஜா, நிர்வாகத்தின் சார்பாக கத்திக் கொண்டிருந்தவரைப் பார்த்து “கையைக் காலை ஒடிப்பேன்” என்று மிரட்டினார்.
பஞ்சாயத்துக்கு வந்த சட்டமன்ற உறுப்பினரை நிர்வாகதரப்பு ஏன் வெறுப்பேற்றியது என்று விசாரித்த போது, அமைச்சர் அன்பரசனுக்கு, செங்கல்பட்டு எம்எல்ஏ-வான வரலட்சுமியின் கணவர் மதுசூதனன் விசுவாசியாம். இந்நிலையில் எஸ். ஆர்.ராஜா அவர் தொகுதியை தாண்டி மதுசூதனின் ஏரியாவுக்குள் நுழைந்து பஞ்சாயத்து செய்துள்ளார்.
இதனால் கடுப்பான மதுசூதனன், விவரத்தை அமைச்சர் காதுக்கு கொண்டு போனதல்லாமல், நிர்வாக தரப்பை விட்டு கலாய்த்தார்களாம்.
ஓ...ஏரியா பிரச்சனையா?
குறிப்பு;-நேற்று தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் ராஜா அவர்கள் ஓர் தனியார் கம்பெனியில் பேசிய பேச்சு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தாம்பரம் காவல்துறை ஆணையர் அவர்களுக்கு ஒரு சமூக ஆர்வலரான முனைவர் லயன் கோவிந்தராஜன் ட்விட்டர் மூலம் புகார் அளித்தார். அதற்கு தாம்பரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டர் மூலமாக பதில் அனுப்பியிருக்கிறார்கள்