மத்திய பல்கலைக்கழகத்தில் சேர செப் 30 வரை அவகாசம்!

க.பாலகுரு,
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவிட செப்-30-ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, உயர்கல்வி படிப்பதற்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை தேர்வு செய்த மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை பதிவு செய்ய வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022 - 23ம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு CUCET (UG) தேசிய தேர்வு முகமையால் கடந்த 15.07.2022 முதல் 11.09.2022 வரை நடத்தப்பட்டன இதன் முடிவுகள் 16.09.2022 அன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு தேர்வு செய்த மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை கடந்த 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளமான cutncucet.samarth.edu.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதற்கான கால அவகாசம் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.