பிளேடால் கையை அறுத்துக்கொண்டு நியாயம் கேட்ட நரிக்குறவர்கள்!

ஜி.கே.சேகரன்,
மின்சாரம் தாக்கி நரிக்குறவர் பலி. பலிக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்தசமுதாயத்தினர் கையில் பிளேடால் அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையம் முற்றுகை காவல் ஆய்வாளருடன் வாக்குவாதம் பதட்டம்.
வேலூர்மாவட்டம்,ஏரிபுதூரை சேர்ந்தவர் விஜயன் (30) நரிகுறவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அந்த கிராமத்தில் அறுந்து கிடந்த மின் ஒயரை தங்கராஜ் என்பவர் எடுத்து ஓரமாக வீச விஜயனிடம் சொன்னார்.
அந்த ஒயரில் மின்சாரம் உள்ளது தெரியாமல் கையில் எடுத்த போது மின்சாரம் தாக்கி விஜயன் பலியானார்.
இதுகுறித்து சரியான நியாயம் கிடைக்காததால் நரிகுறவர் சமுதாய மக்கள் அனைக்கட்டு காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு கையில் பிளேடால் அறுத்துகொண்டு ரத்தம் சொட்ட சொட்ட தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அனைக்கட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவான தங்கராஜை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயன் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நரிகுறவர்கள் நியாயம் கேட்டு திடீர் போராட்டத்தால் பதட்ட நிலையும் பரபரப்பும் காணப்பட்டது.