அடிப்படை மருத்துவமே இல்லாத கிராமத்தில் தாய் சேய் மரணம்! ஆம்புலன்ஸ் லேட் ஆனதால் பரிதாபம்!
ஜி.கே.சேகரன்,
மலைகிராமத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் 9 மாத கர்ப்பிணி மற்றும் குழந்தை உயிரிழப்பு,உரிய மருத்துவ வசதி இல்லாததே உயிரிழப்பு காரணம் எனவும் உரிய மருத்து வசதி வேண்டி வாணியம்பாடி - குப்பம் சாலையில் மலை கிராம மக்கள் சாலை மறியல்..
திருப்பத்தூர் மாவட்டம்.வாணியம்பாடி அடுத்த வெலதிகாமணி பெண்டா பகுதியை சேர்ந்தவர் அசோக், இவரது மனைவி சரண்யா ஒன்பது மாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரண்யாவின் உறவினர்கள் ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்துள்ளனர்.
ஆனால் மலைகிராமத்தில் ஆம்புலன்ஸ் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியான சரண்யா மற்றும் அவரது குழந்தை உயிரிழந்துள்ளனர். ஆத்திரமடைந்த மலைகிராம மக்கள் தங்களது கிராமத்தில் உரிய மருத்துவ வசதி இல்லாததே கர்ப்பிணி மற்றும் குழந்தை உயிரிழப்பு காரணம் என கூறி வெலதிகாமணிபெண்டா பகுதியில் உள்ள வாணியம்பாடி - குப்பம் சாலையில் அரசு பேருந்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நாடு வளர்ந்து பூத்து குலுங்குகிறது என்று வாய்கிழிய பேசும் கரைவேட்டிகளின் வாயில் ஒரு குத்துவிட்டால் என்ன?