ராகுல் வழக்கு ரத்து:- பட்டாசு வெடித்து கொண்டாடிய புதுவை காங்கிரஸ்!

கலை,
ராகுலுக்கு எதிரான சூரத் நிதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் புதுவை காங்கிரசார் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்த தீர்ப்புக்கு தடை விதித்து சூரத் செசன்ஸ்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வரவேற்று காமராஜர் சிலை அருகே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி காங்கிரசார் கொண்டாடினர். மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, பொதுச்செயலாளர்கள் தனுசு, இளையராஜா, திருமுருகன், சந்திரிகா, வட்டார தலைவர்கள் ஆறுமுகம், ரமேஷ், மகிளா காங்கிரஸ் பஞ்சகாந்தி, ரத்னா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.