பொதுமக்களுக்கு இடையூறாக திமுக பேனர்கள்!அதிமுகவினர் கலாட்டா!

பொதுமக்களுக்கு இடையூறாக திமுக பேனர்கள்!அதிமுகவினர் கலாட்டா!

 கு.அசோக்,

   வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், நெடுஞ்சாலையில்  வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்ற கோரியும்   பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் ,காட்பாடியில் வேலூர் அதிமுக மாநகர மாவட்ட கழக செயலாளா எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.