வெள்ளம் பாதித்த பகுதியில் பாஜக உதவி!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
தென்மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோகோ பவுண்டேஷன் உதவியுடன் பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 4000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள், உடை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இவற்றை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் இளைஞரணி மாநில துணை தலைவர் நயினார் பாலாஜி இணைந்து வழங்கினார்கள்.
பாதிப்புக்குள்ளான மக்களை சந்தித்த பின்பு ஆனந்தன் பேசியதாவது: இது போன்ற ஒரு இயற்கை பேரிழப்பு தென்தமிழகத்தில் நடந்ததில்லை. அதிகப்படியான உயிரிழப்பு, பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆளும் திமுக கட்சியினர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை கையாளப்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை என கடுமையாக சாடினார். அப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி பாஜக மாவட்ட மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு இரத்ததான முகாமில் வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள், தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர்கள், நகர்மன்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இரத்ததானம் கொடையாளிகள் , கலாமின் கனவுகள் அறக்கட்டளை என்எப்எஸ், சிங்கப்பெண்கள், நீட் ஃபார் சர்வீஸ், போதையில்லா தமிழகம், உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இந்த இரத்ததான முகாமை தென்காசி மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளரான மக்கள் சேவகர் ஆனந்தன் அவர்கள் பேசியதாவது இந்தியாவில் தினந்தோறும் ஒன்றரை கோடி இரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால் 20 முதல் 30 சதவீதத்திற்கு மேல் பற்றாக்குறையாக உள்ளது. அதன் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி இரக்தான் அம்ரித் மகத்சோவ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.
இரத்தான மூலம் உடல் ஆரோக்கியம் குறைகிறது என தவறான கண்ணோட்டம் உள்ளது. ஆனால் இரத்ததானம் செய்வதினால் உடல் ஆரோக்கியமும் வலிமையும் பெறுகிறது. அதனை மனதில் கொண்டு அனைவரும் இரத்ததானம் செய்வோம் ஆரோக்கியமாக வாழ்வோம் என பேசினார்கள்.
முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ், நினைவு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
முகாமில் கலந்து கொண்ட தன்னார்வ அமைப்புகளுக்கு தென்காசி மக்களவை தொகுதி பாஜக பொறுப்பாளர் ஆனந்தன் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. இந்த முகாமில் திரளான மருத்துவர்கள், செவிலியர்கள் , பாஜக தொண்டர்கள் , சங்கரசுப்பிரமணியன் , லட்சுமணபெருமாள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கருப்பசாமி, இராஜ்குமார், சுப்ரமணியன், சுமு.முருகன்,கோபி கலந்து கொண்டனர்.