சைக்கிளில் வலம் வந்த வேலூர் கலெக்டர்!

சைக்கிளில் வலம் வந்த வேலூர் கலெக்டர்!

ம.பா.கெஜராஜ்,

இந்திய அரசு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்  கீழ் செயல்படும் நேரு யுவ கேந்த்ரா மற்றும் வேலூர் மாநகராட்சி  ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் சார்பாக  ஜூன் 3, 2022 அன்று காலை 6 மணிக்கு உலக சைக்கிள் தினம் மற்றும் 75வது சுதந்திர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைக்கிள் பேரணி நடைபெற்றது.

   இந்த பேரணியில் பல்வேறு இளைஞர் மன்றங்கள் மற்றும் சைக்கிள் கழகத்தையும் சார்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை கதிர் ஆனந்த் எம்.பி., ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அசோக் குமார், ஆணையாளர், வேலூர் மாநகராட்சி ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

 இந்த பேரணியில் பங்கேற்ற  இளைஞர்கள் 7.5  கிலோ மீட்டர் தூரத்திற்கு வேலூர் கோட்டையிலிருந்து நேரு யுவ கேந்த்ரா அலுவலகம் வரை சைக்கிள் ஓட்டி பேரணியை நிறைவு செய்தார்கள் 

அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாநகராட்சி ஆணையாளர் அவர்களும் பங்கேற்று பேரணியை நிறைவு செய்தார்கள். 

இளைஞர்களிடம் தேசப்பற்றை ஊக்குவித்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நேரு யுவ கேந்த்ரா மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத் குமார் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சியின் இறுதியில் நேரு யுவ கேந்த்ரா இளைஞர் மன்றங்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்

மேலும் இந்த நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்த்ரா காயத்ரி , மாவட்ட சைக்கிளிங் கழகத் தலைவர் திரு பொன்னம்பலம், மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பாக  நோஹ்லின் ஜான் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரஸ்வதி, மற்றும் முன்னாள் ராணுவ வீரர் திரு அருள்நம்பி ஆகியோர் பங்கேற்றனர்.