போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் கொத்தாக டிரான்ஸ்பர்!

போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் கொத்தாக டிரான்ஸ்பர்!

ம.பா.கெஜராஜ்,

சென்னை மாநகர போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் கொத்தாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்த விவரம் வருமாறு,

  சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்களின் உத்தரவின் படி, 32 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

  அந்த வகையில் நீலாங்கரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமார் கோடம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும்,  இசக்கிபாண்டியன் எழும்பூர் குற்றப்பிரிவுக்கும் , அம்மு ஆதம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.  கொத்தவால்சாவடி குற்றப்பிரிவு செல்லப்பா பரங்கிமலை சட்டம் ஒழுங்குக்கு மாற்றப்பட்டுள்ளார். புளியந்தோப்பு குற்றப்பிரிவில் இருந்த ஜானகிராமன் புளியந்தோப்பு சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், நுண்ணறிவுப் பிரிவில் இருந்த புஷ்பராஜ் யானைக்கவுனி சட்டம் -ஒழுங்கு  பிரிவுக்கும்,   அண்ணாநகர் சட்டம்- ஒழுங்கில் இருந்த ராஜேஷ்பாபு கோயம்பேடு குற்றப்பிரிவுக்கும் மாறுதல் செய்யப்பட்டனர்.

    அதே போல் கோபாலகுரு, சீனிவாசன், வாசுகி, ராஜலஷ்மி, மாலதி, பிரான்வின் டேனி, ஆக்யமேரி, அகிலா, பொன்ராஜ், ராஜாராம்,  ராஜ்பாபு, செந்தில், ஷோபா தேவி, ராமலிங்கம், வடிவேலு, பூபாலன், புகஷேந்தி, பழனி, வெற்றிச் செல்வன், சோஜிம் ஜெர்ரி, தவமணி  உள்ளிட்ட 32 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.