பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சி!

பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சி!

கு.அசோக்,

  மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரம்பரிய நெல் விதைகள் திருவிழா மற்றும் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கில் தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு.

 வேலூர் ¢மாவட்டம், அரியூரில் உள்ள நாராயணி மண்டபத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில்  பாரம்பரிய நெல் மற்றும் பாரம்பரிய விதைகள் அரிசிகள் ஆகியவைகள் கண்காட்சி மற்றும் உணவு திருவிழா ஆகியவைகள் நடந்தது.

  இதில் மிழகம் முழுவதுமிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.  இயற்கை விவசாயத்தை அதிகரிக்கவும் இயற்கை விவசாயம் குறித்து மக்களிடம் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கும் நடந்தது.

  இதனை வேலூர் நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி துவங்கி வைத்தார்.  இதில் தமிழ்நாடு ,ஆந்திரா,கேரளா பாண்டிசேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனா.

¢ மேலும் மண்ணை காக்கவும், நச்சு வேதி உரங்கள் இல்லாமல் எவ்வாறு விவசாயம் செய்வது எப்படி? வேதி உரங்களால் உணவில் கலப்படம் ஏற்பட்டு அது பல நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பதனையும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.

 மேலும் இயற்கை மருத்துவர், பூச்சியியல் வல்லுநர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்று விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களை அளித்தனர். 

   இதில் கலந்துகொள்ளும் அனைத்தும் விவசாயிகளுக்கும் இலவசமாக ஒரு கிலோ விதை நெல் வழங்கபட்டது இதில் பாரம்பரிய கருப்பு கவுனி அரிசி மாப்பிள்ளைசம்பா, தங்கசம்பா, சிவனார் சம்பா, கிச்சடி ,மற்றும் சாமை,தினை சோளம் உள்ளிட்டவைகளால் ஆன பாரம்பரிய உணவுகள் பாரம்பரிய காய்கறிகளான பூசனி, சுரைக்காய், அவரைக்காய்,பாகற்காய் ஆகியவைகள் பழமையான பாரம்பரிய விதைகள் தேன்,பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளிட்டவைகளும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.