சொகுசு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்ட காஞ்சி கவுன்சிலர்கள்!அப்பாடா... மேயர் பதவி தப்பியது!

சொகுசு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்ட காஞ்சி கவுன்சிலர்கள்!அப்பாடா... மேயர் பதவி தப்பியது!

 ம.பா.கெஜராஜ்,

 காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில்,  அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார்.

  காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், மாநகராட்சி மேயராக திமுகவின் மகாலட்சுமி செயல்பட்டு வந்தார்.

   இந்நிலையில் இவரின் செயல்பாடுகள் சரி வர இல்லை என அதிமுக, பாஜக, சுயேச்சை மாமன்ற உறுப்பினர்கள்  எதிர்ப்பை தெரிவித்து, கடந்த சில மாதங்களாக 22 திமுக மாநகராட்சி கவுன்சிலர்களும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களோடு இணைந்து மேயருக்கு எதிரான செயல்பாட்டினை தொடங்கினர்.

 அதன் உச்சகட்ட்டமாக மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அளித்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு குறித்து வாக்கெடுப்பு விவாதம் நடைபெறும் என ஆணையர் செந்தில்முருகன் அறிவித்திருந்தார்.

 அப்படியிருக்க காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கம் கூட்டரங்கில், டிஎஸ்பி முரளி தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்புடன் காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் ஆணையர் செந்தில் முருகன் வருகையுடன் துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.

 காலை 10 மணி முதல் 11 மணி வரை எந்த மாமன்ற உறுப்பினர்களும் கூட்டத்திற்கு வருகை புரியவில்லை. 34 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரவீன் குமார் மட்டும் நேரில் வந்து ஆணையரிடம் தனக்கு அளித்த தகவல்கள் முரண்பாடாக உள்ளதாக கூறி மனுவை வழங்கி விட்டு வெளியே சென்று விட்டார்.

  இதனைத் தொடர்ந்து 11.50 மணி அளவில் மாநகராட்சி கூட்டம் நிறைவு செய்து கொண்டு வெளியே வந்த மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது,மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி 33 பேர் மனுவளித்த நிலையில் அது குறித்து 9-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

  29ஆம் தேதி இது குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் இன்று எந்த ஒரு மாநகராட்சி கவுன்சிலர்களும் கூட்டத்திற்கு வராத நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜே தொடர்வார் என தெரியவந்துள்ளது.

  மேயர் மகாலட்சுமியின் செயல்பாடுகளில் எதிர்தரப்பு கவுன்சிலர்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது. ஆனால் பெரிய ஸ்கீம் ஒன்றை நிறைவேற்றுவதில் கோடிக்கணக்காண பணம் கமிஷனகா கைமறியதாக தகவல். அந்த கமிஷனில் தங்களுக்கு பங்கு கிடைக்கவில்லை என்பதினாலேயே சில கவுன்சிலர்களின் தூண்டுதலின் பேரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முனைந்திருக்கிறார்கள்.

  இந்த பஞ்சாயத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர் கூட பேசி பார்த்தாராம். அப்பவும் காம்ரமைஸ் ஆகாததால் சென்னைக்கு கவுன்சிலர்கள்.  அழைத்து பேசி கொத்தாக வெளியூருக்கு சொகுசு பேருந்தில் அனுப்பிவைக்கப்படனராம். அதனால் தான் எந்த கவுன்சிலரும் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை.

ஆக மகாலட்சுமிக்கு தற்போதைய நிலையில் மேயர் பதவி தப்பித்திருக்கிறது.