கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் எம் .எல் .ஏ.க்கள்! எல்லாம் மேயர் கனவுதாங்க!

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் எம் .எல் .ஏ.க்கள்! எல்லாம் மேயர் கனவுதாங்க!

ம.பா.கெஜராஜ்,

 தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பலர், தற்போது நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

   அதுபற்றின விவரம் வருமாறு,

  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.என்.சேகரன். இப்போது இவர் திருச்சி மாநகராட்சியில் திமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

   அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்காக தனது திருவெறும்பூர் தொகுதியை இரண்டு முறை விட்டுக்கொடுத்தவர் என்பதால், இவர் கவுன்சிலராக வெற்றிபெறும் பட்சத்தில் திருச்சி மேயராகவோ அல்லது துணை மேயராகவோ வாய்ப்புகள் அதிகம் என பேசப்படுகிறது.

  திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த அலெக்சாண்டர். இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில் இப்போது மாநகராட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

  சென்னை மாநகராட்சி 89-வது வார்டில் போட்டியிடும் அலெக்ஸ்சாண்டர் அதிமுக மகத்தான வெற்றி பெற்றால் துணை மேயர், தோல்வி அடைந்தால் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் என எய்ம் வைத்திருக்கிறார்.

   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக உதயமான ஒசூர் மாநகராட்சியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஒசூர் மாநகராட்சியில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் பட்சத்தில் மேயர் பதவியை பிடிப்பதற்கு சத்யா காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  திருப்பூர் மாநகராட்சியின் 35-வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

   இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், அதிக இடங்களில் அதிமுக வெற்றிபெறும் பட்சத்தில் திருப்பூர் மேயர் பதவியை குறித்து உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்.

 இதேபோல் முன்னாள் அமைச்சர்களான பாலகிருஷ்ணா ரெட்டி, எஸ்.பி.சண்முகநாதன், செல்வி ராமஜெயம், உள்ளிட்டோர் குடும்பங்களில் இருந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

   இவர்கள் அனைவருமே மேயர் அல்லது துணை மேயர் பதவிகளுக்கு எய்ம் செய்திருக்கிறார்கள்.

பட்ஜெட் கோடிகளிலாம்.