ஜல்லிக்கட்டு காளை விபத்தில் காயம்!

ஜி.கே.சேகரன்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவுக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் பிக்கப் வேன் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பெரிய கண்ணாலபட்டி பகுதியில் புளிய மரத்தின் மீது மோதியதில் எருது உட்பட நான்கு பேர் காயம்!
திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (50) மற்றும் புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி (45) ஆகிய இவர்களுக்கு சொந்தமாக எருதுகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்களுக்கு சொந்தமான இரண்டு எருதுகளை பிடித்துக் கொண்டும் அதேபோல சுற்றுவட்டாரப் பகுதி இளைஞர்கள் 10க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் எருது விடும் திருவிழாவிற்கு சென்றனர்.
எருது விடும் திருவிழாவை முடித்துக் கொண்டு நேற்று காலை வீடு திரும்பிய நிலையில் அந்த பிக்கப் வேன் ஓட்டுநர் ஆரோக்கிய சாமி தூக்க கலக்கத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பெரியகண்ணாலபட்டி பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் ஓரத்தில் உள்ள புளியமரத்தின் மீது மோதியதில்னதில்பிக்கப் வேனில் பயணித்த பிரவீன், ஸ்ரீராம், சூரியகுமார், ஹரி, நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பிக்கப் வேனில் இருந்த எருதுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எருது விடும் திருவிழாவுக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் சாலையின் ஓரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது பிக்கப் வேன் மோதி நான்கு பேர் காயம் ஏ