கஞ்சா ஸ்பாட்டாக மாறிய காட்பாடி!

கு.அசோக்
பல்வேறு மாநிலங்களிலிருந்து காட்பாடிக்கு கஞ்சா பெண்டல்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அசாமில் இருந்து ரயில் மூலம் கன்னியாகுமரிக்கு கடத்திய ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது. காட்பாடி இருப்புப் பாதை காவல்துறையினர் நடவடிக்கை.
வேலூர் மாவட்டம், காட்பாடி இரயிவே சந்திப்பு இருப்புப் பாதை காவலர்கள் அசாம் மாநிலம் திப்ருகார்க்கில் இருந்து கன்னியாகுமாரி செல்லும் விவேக் எஸ்பிரஸ் பயணிகள் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரயிலின் முன் பக்க புது பெட்டியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் கஞ்சா கடத்துவது தெரியவந்தது. இதனை அடுத்து ரயிலில் கஞ்சா கடத்திய அசாம் மாநிலம் சிமலகுரியை சேர்ந்த ஜாஹிருல் இஸ்லாம் (22) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நான்கில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.